சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

9.010   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா

திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் -
தளிரொளி மணிப்பூம் பதம்சிலம் பலம்பச்
   சடைவிரித் தலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலைமுத் தரும்பித்
   திருமுகம் மலர்ந்துசொட் டட்டக்
கிளரொளி மணிவண் டறைபொழிற் பழனங்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வளரொளி மணியம் பலத்துள்நின் றாடும்
   மைந்தன்என் மனங்கலந் தானே. 


[ 1]


துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்
   சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும்
   கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளும்நீர்ப் பழனங்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள் நின்றாடும்

   மைந்தன்என் மனங்கலந் தானே.


[ 2]


திருநுதல் விழியும் பவளவாய் இதழும்
   திலகமும் உடையவன் சடைமேற்
புரிதரு மலரின் தாதுநின் றூதப்
   போய்வருந் தும்பிகாள் இங்கே
கிரிதவழ் முகிலின் கீழ்த்தவழ் மாடங்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வருதிறல் மணியம் பலவனைக் கண்டென்
   மனத்தையும் கொண்டுபோ துமினே. 


[ 3]


தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும்
   செவிஅவன் அறிவுநூல் கேட்கும்
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள்
   விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும்
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தனே என்னும்என் மனனே.


[ 4]


தோழி யாம்செய்த தொழில்என் எம்பெருமான்
   துணைமலர்ச் சேவடி காண்பான்
ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து
   நெக்குநைந் துளங்கரைந் துருக்கும்
கேழலும் புள்ளு மாகிநின் றிருவர்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வாழிய மணியம் பலவனைக் காண்பான்
   மயங்கவும் மாலொழி யோமே. 


[ 5]


Go to top
என்செய்கோம் தோழி தோழிநீ துணையா
   இரவுபோம் பகல்வரு மாகில்
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும்
   அலமரு மாறுகண் டயர்வன்
கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவிற்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மஞ்சணி மணியம் பலவவோ என்று
   மயங்குவன் மாலையம் பொழுதே. 


[ 6]


தழைதவழ் மொழுப்பும் தவளநீற் றொளியும்
   சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
   குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனங்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தர்தம் வாழ்வுபோன் றதுவே. 


[ 7]


தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
   தமருகம் திருவடி திருநீ
றின்னகை மழலை கங்கைகொங் கிதழி
   இளம்பிறை குழைவளர் இளமான்
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.


[ 8]


யாதுநீ நினைவ தெவரையா முடைய
   தெவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
   பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
   கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தன்என் மனம்புகுந் தானே. 


[ 9]


அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்
   அழகிய சடையும் வெண்ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன்
   செய்வதென் தெளிபுனல் அலங்கற்
கெந்தியா உகளுங் கெண்டைபுண் டரீகங்
   கிழிக்குந்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தனே அறியும்என் மனமே. 


[ 10]


Go to top
கித்திநின் றாடும் அரிவையர் தெருவிற்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
   பெரியவர்க் ககலிரு விசும்பின்
முத்தியா மென்றே உலகர்ஏத் துவரேல்
   முகமலர்ந் தெதிர்கொளுந் திருவே. 


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
9.010   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
Tune -   (திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song